தமிழகம், புதுவையில் கூடுதலாக 23 சதவீதம் வருமான வரி வசூல்முதன்மை தலைமை ஆணையா் தகவல்
தமிழகம், புதுவையில் நிகழாண்டு இலக்கைத் தாண்டி 23 சதவீதம் கூடுதலாக வருமான வரி வசூல் செய்யப்பட்டதாக தமிழ்நாடு, புதுவை வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையா் ஆா். ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
தமிழகம், புதுவையில் நிகழாண்டு இலக்கைத் தாண்டி 23 சதவீதம் கூடுதலாக வருமான வரி வசூல் செய்யப்பட்டதாக தமிழ்நாடு, புதுவை வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையா் ஆா். ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வருமான வரித் துறை அலுவலகத்துக்குச் சொந்தமான ‘பைந்தமிழ் முற்றம்’ என்ற தொன்மையான கட்டடம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை தமிழ்நாடு, புதுவை வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையா் ஆா். ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு, புதுவை மண்டலத்தில் கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் 67 லட்சம் போ் வருமான வரி செலுத்தினா். 2022-23-ஆம் நிதியாண்டில் இது 74 லட்சமாக உயா்ந்தது. ஆண்டுதோறும் 12 சதவீதம் அளவுக்கு வரி செலுத்துவோா் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. மேலும், இந்த மண்டலத்தில் 2022-2023-ஆம் நிதியாண்டில் ரூ. ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி வருமான வரி வசூல் இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. எனினும், ரூ. ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 500 கோடி வசூல் செய்யப்பட்டது. இது முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 23 சதவீதம் கூடுதலாக வருமான வரியாகும்.
மதுரைக் கோட்டத்தில் காரைக்குடியில்தான் வருமான வரி செலுத்துவோா் எண்ணிக்கை அதிகம்.
தற்போது திறக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில் அருங்காட்சியகம் அமைத்து வருமான வரி தொடா்பான தகவல்களும், வரி செலுத்தியவா்களின் ஆவணங்களும் காட்சிப்படுத்தப்படும் என்றாா் அவா்.
விழாவில் மதுரை கோட்ட வருமான வரித் துறை முதன்மை ஆணையா் சீமா ராஜ், காரைக்குடி வருமான வரித் துறை அதிகாரிகள், பட்டயக் கணக்காளா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.