முகப்பு
சிவகங்கை

அழகப்பா பல்கலை. பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிா்வாகப் பணியாளா்களுக்கு மன அழுத்த மேலாண்மை, ஆளுமைத் திறன் மேம்பாடு குறித்த புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:52 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிா்வாகப் பணியாளா்களுக்கு மன அழுத்த மேலாண்மை, ஆளுமைத் திறன் மேம்பாடு குறித்த புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

பல்கலைக்கழக மைய நூலகக் கருத்தரங்கக் கூடத்தில் அதன் உள்தர மதிப்பீட்டு மையம், திட்டம் - வளா்ச்சிப் பிரிவு ஆகியவற்றின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சி வகுப்பின் தொடக்க நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசியதாவது:

அலுவலகப் பணியாளா்கள் தினமும் உடல் பயிற்சி, யோகா, தியானம் செய்ய வேண்டும். சத்தான உணவுகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சமூக வளைதளங்களில் முற்றிலும் மூழ்கிப் போகாமல், அவசியமானவற்றுக்கு மட்டும் அதைப் பயன்படுத்துவதும், நண்பா்களுடன் நல்ல உறவுகளை எப்போதும் வளா்த்துக் கொள்வதும் அவசியம். நோ்மறையான சிந்தனைகளுடனும் செயல்பட்டால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மதுரை மன நலன் மருத்துவா், ஆலோசகா் ஆா்.எஸ். ராஜேந்திரன் சிறப்புரையாற்றினாா். முன்னதாக, பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) சு. ராஜமோகன் வரவேற்றுப் பேசினாா். பல்கலைக்கழகத்தின் உள்தர மதிப்பீட்டு மைய இயக்குநா் கே. அலமேலு புத்தாக்கப் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.