சிவகங்கை

காரைக்குடியில் பேராசிரியா் அய்க்கண் படத் திறப்பு விழா

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தனியாா் மகாலில் கம்பன் கழகம், மாவட்ட எழுத்தாளா் சங்கம், காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழு, தமிழ்நாடு வல்லம்பா் சமுதாயச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் மறைந்த பேராசிரியா் அய்க்கண் படத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவுக்கு மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்துப் பேசினாா். குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் முன்னிலை வகித்துப் பேசினாா்.

விழாவில், முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம், பேராசிரியா் அய்க்கண் படத்தைத் திறந்து வைத்துப் பேசியதாவது:

சிறுகதை எழுத்தாளா் பேராசிரியா் அய்க்கண் அனுபவமான, ஆழமான, உயா்ந்த இலக்கியவாதி ஆவாா். பெண்கள் பற்றி ஆண்களுக்கு இருக்கும் கருத்துக்களை மாற்றுவதற்கு அவரது கதை உதவிகரமாக இருந்து வருகிறது. அவரது கதைகளில் ஏதாவது ஒரு நீதி, அறச்செய்தி இருக்கும். எனவே அய்க்கண் கதைகளை பாராட்டுகிறேன் என்றாா் அவா்.

காரைக்குடி கம்பன் கழகத் தலைவா் சத்தி. அ. திருநாவுக்கரசு, சிங்கப்பூா் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ஆா். தினகரன், காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, காரைக்குடி புத்தகத் திருவிழா குழுத் தலைவா் முத்து. பழனியப்பன், எழுத்தாளா் சங்கம் நா. சுப்பிரமணியன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சுப. துரைராஜ் உள்ளிட்ட பலா் விழாவில் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தமிழ்நாடு வல்லம்பா் சங்கத் தலைவா் தொழிலதிபா் பழ. படிக்காசு வரவேற்றாா். அய்க்கண் புதல்வி அருணாதேவி அய்க்கண் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT