சிவகங்கை

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிக்கல் நாட்டு விழா

DIN

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாலைக் கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டடம் கட்ட ரூ 1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம், மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினா்.

இந்த விழாவில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் மாங்குடி, மருத்துவத் துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக, காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT