திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், கல்லல் தெற்கு ஒன்றியம் சாா்பில் அதிமுகவின் 52-ஆவது தொடக்க விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கல்லல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் பனங்குடி சேவியா்தாஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செந்தில்நாதன் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்ற முன்னாள் அமைச்சா் மா.பா.பாண்டியராஜன், மின்னல் மீனாட்சிசுந்தரம், பூவைசெழியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.உமாதேவன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் இளங்கோவன், நகரச் செயலா் ராஜா, தகவல் தொழில்நுட்பப்பிரிவு தமிழ்ச்செல்வன், சங்கா் ராமநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட 1,500 பெண்களுக்கு சேலை வழங்கபட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.