காலமானார் இரா. இராசேந்திரன்
புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓய்வுபெற்ற உதவித் தலைமை ஆசிரியர் இரா. இராசேந்திரன் காலமானார்.
புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓய்வுபெற்ற உதவித் தலைமை ஆசிரியர் இரா. இராசேந்திரன் (92), வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை மாலை மாலையீடு பாரி நகரிலுள்ள அவரது வீட்டில் காலமானார்.
இவருக்கு, திருமயம் தினமணி நிருபர் இரா. மோகன்ராம் உள்பட 5 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.
இறுதிச் சடங்குகள் அவர் பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் தெக்கூர் கிராமத்தில் சில நாட்கள் கழித்து நடைபெறும்.
தொடர்புக்கு- 94434 95269.