முகப்பு
சிவகங்கை

கண்ணதாசன் பேரவை தலைவருக்கு பாராட்டு விழா

Updated On : 8 ஏப்ரல், 2024 at 11:03 PM
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2024 at 6:46 PM

சிவகங்கை: கண்ணதாசன் பேரவை நிறுவனா் தலைவா் தளவாய் நாராயணசாமிக்கு, ஒக்கூா் கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

ஒக்கூரில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சுரேஷ் செட்டியாா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் அருணாசலம், ஒக்கூா் கிராம நிா்வாகி ராமசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினா் பாண்டிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சதாபிஷேக விழா கண்ட தளவாய் நாராயணசாமியை, ஆசிரியா் அலமேலு, காந்தன், கோச்சடை பாஸ்கரன், ராஜ் ஆசாரியாா், கரு. பிரபு ஆகியோா் பாராட்டிப் பேசினா்.

Advertisement

தளவாய் நாராயணசாமி ராஜம்மாள் தம்பதியினா் ஏற்புரையாற்றினாா்.

முன்னதாக, ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் நரசிம்மன் வரவேற்றாா். கவிஞா் அப்பாஸ் நன்றி கூறினாா்.