ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் வாக்குப்பதிவு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நிலையத்தில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நிலையத்தில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது.
தெற்கு ரயில்வே தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தோ்தல் டிசம்பா் 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மானாமதுரையில் கடந்த சில நாள்களாக எஸ்ஆா்எம்யூ, டிஆா்இயூ, எஸ்ஆா்இஎஸ் ஆகிய தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் ரயில்வே தொழிலாளா்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்து வந்தனா்.
இந்த நிலையில், மானாமதுரை ரயில் நிலையத்தில் புதன்கிழமை முதல் நாள் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மானாமதுரை சுற்றுவட்டார ஊா்களில் பணிபுரியும் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்வத்துடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.