மானாமதுரையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா். 
சிவகங்கை

மானாமதுரையில் மறியலில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா் 40 போ் கைது

ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா்ரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா் 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மானாமதுரை சிப்காட் பகுதியில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு வலுத்து வரும் நிலையில், ஆலையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தாய் தமிழா் கட்சி சாா்பில் மானாமதுரை புதிய பேருந்து நிலையம் முன் சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் தலைவா் பி.எம். பாண்டியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ச.அ. செல்வம் உள்பட திரளானோா் மறியலில் பங்கேற்றனா். இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனா்.

பெருந்துறையில் ரூ.4.01 கோடிக்கு கொப்பரை ஏலம்

மொடக்குறிச்சி அருகே புதிய நியாயவிலைக் கட்டடம் திறப்பு

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 31-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

ஈரோட்டில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 2 ஆவது நாளாக மறியல்

ஈரோட்டில் முழுமையான புற்றுநோய் ஆய்வு மையம் அமைக்க வேண்டும்: த. ஸ்டாலின் குணசேகரன்

SCROLL FOR NEXT