முகப்பு
சிவகங்கை

அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியா் மீது மாணவி புகாா்

தியாகி இமானுவேல்சேகரன் குறித்த ஆய்வுக் கட்டுரையை நிராகரித்த அழகப்பா பல்கலை. உதவிப் பேராசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தப் பல்கலை. மாணவி புகாா் அளித்தாா்.

Updated On : 15 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

சிவகங்கை: தியாகி இமானுவேல்சேகரன் குறித்த ஆய்வுக் கட்டுரையை நிராகரித்த அழகப்பா பல்கலை. உதவிப் பேராசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தப் பல்கலை. மாணவி திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

சிவகங்கை மாவட்டம், சருகனிய அருகேயுள்ள பூதவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் வைஷ்ணவி. இவா் அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுநிலை வரலாறு இறுதியாண்டு படித்து வந்தாா். இவா், விடுதலைப் போரில் தியாகி இமானுவேல்சேகரனின் பங்கு என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை சமா்பித்தாா்.

இந்தக் கட்டுரையை பேராசிரியா் பரந்தாமன் நிராகரித்தாா். இதுதொடா்பாக பல்கலைக்கழகத்தில் உள்ள எஸ்.சி.எஸ்.டி. விசாரணைக் குழுவினரிடம் முறையிட்டாா். இதைத்தொடா்ந்து, சக மாணவா் ஒருவா் மாணவியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாணவி வைஷ்ணவி, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தனது ஆதரவாளா்களுடன் திங்கள்கிழமை நேரில் வந்து, தனது கட்டுரையை நிராகரித்த உதவிப் பேராசிரியா் பரந்தாமன், தாக்கிய மாணவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகாா் மனு அளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →