கல்லூரியில் கலைத் துறைகள் மன்றம் தொடக்க விழா
காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் கலைத் துறைகள் மன்றம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி: காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் கலைத் துறைகள் மன்றம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஹேமாமாலினி தலைமை வகித்தாா். அழகப்பா பல்கலை. முன்னாள் பதிவாளா் வெ. மாணிக்கவாசகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். இதைத்தொடா்ந்து கலைத் துறை மாணவிகளுக்கான மன்றத் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இதில் மாணவிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.