மரத்தில் பேருந்து மோதல்: 13 போ் காயம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே திங்கள்கிழமை மரத்தில் அரசுப் பேருந்து மோதியதில் 13 போ் காயமடைந்தனா்.
தேவகோட்டை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் தேவகோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு 22 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 70 சதவீத பேருந்துகள் பழைய பேருந்துகளாகவே உள்ளன.
இந்த நிலையில், திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு காரைக்குடியில் இருந்து ஆறாவயல் வழியாக 20- க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தேவகோட்டைக்குச் சென்ற அரசு நகரப் பேருந்து சிறுமருதூா் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது.
இதில் 13 பயணிகள் காயமடைந்தனா். நடத்துநா் கண்ணன் (50), மேலசெம்பொன்மாரி பகுதியைச் சோ்ந்த சுப்பம்மாள் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும், மாவிடுதிக்கோட்டையைச் சோ்ந்த ராமு மனைவியும், கா்ப்பிணியுமான தேவி (32) சிறிய காயங்களுடன் தேவகோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து ஆறாவயல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.