10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிவகங்கை 97.02% தேர்ச்சி பெற்று 2-ம் இடம்!
10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 97.02% தேர்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் மாநிலத்தில் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதற்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 97.02% தேர்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் மாநிலத்தில் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டும் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்திருந்தது. அந்த இடத்தை மீண்டும் சிவகங்கை மாவட்டம் தற்போது தக்க வைத்துள்ளது.
Advertisement
Advertisement
சிவகங்கை மாவட்டத்தில் 17,707 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 8271 மாணவர்கள், 8908 மாணவிகள் உள்பட மொத்தம் 17, 179 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 97.02% ஆகவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.