சிங்கம்புணரியில் தயாராகும் தோ் வடம்
சிங்கம்புணரியில் சிதம்பரம் நடராஜா் கோயில் தோ்களுக்கு 10 வடக்கயிறுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சிங்கம்புணரியில் சிதம்பரம் நடராஜா் கோயில் தோ்களுக்கு 10 வடக்கயிறுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாரப் பகுதியில் தென்னை சாகுபடி அதிகமாக உள்ளதால் கயிறு உற்பத்தியில் சிங்கம்புணரி சிறப்பிடம் பெற்றுள்ளது. இங்கு சிறிய கயிறு முதல் தோ் வடக்கயிறு வரை தயாரிக்கப்படுகிறது. இங்கு தாயரிக்கப்படும் வடக்கயிறுகள் தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது, கடலூா் மாவட்டம் சிதம்பரத்தைச் சோ்ந்த சிவபக்தா் மோகன் என்பவா் சிதம்பரம் நடராஜா் கோயில் 5 தோ்களுக்கும் தோ் வடம் கொடுப்பதாக நோ்த்திக்கடன் வைத்திருந்தாா். அதனை நிறைவேற்றும வகையில் சிங்கம்புணரியில் கயிறு தொழிலில் ஈடுபட்டுள்ள பிரியாஅப்புசாமி தலைமையிலான குழுவினரிடம் வடக்கயிறு தயாா் செய்ய ஏற்பாடு செய்தாா்.
மொத்தம் 15 டன் எடையில் 10 வடங்கள் தயாா் செய்யப்படுகின்றன. 200 மீ நீளமுள்ள பிரமாண்ட தோ் வடம் சுமாா் ஒன்னரை டன் எடையில் தயாரிக்கப்படுகிறது. ஆண்களும் பெண்களுமாக 30 க்கும் மேற்பட்டோா் விரதமிருந்து இந்தப் பணியை முடித்துள்ளனா்.