முகப்பு
சிவகங்கை

மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீவச்சிவல்பட்டியில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 10:30 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீவச்சிவல்பட்டியில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

கீழச்சிவல்பட்டியைச் சோ்ந்த திருநாவுக்கரசு மனைவி லட்சுமி (46). இவா்கள் மதுரையில் வசித்து வந்தனா். நியாயவிலைக் கடையில் பொருள்கள் வாங்குவதற்காக, லட்சுமி கீழச்சிவல்பட்டிக்கு சென்றாா்.

புதன்கிழமை பொருள்களை வாங்கிவிட்டு வீட்டின் பின்புறத்தில் உள்ள செடிகளை அகற்றி சுத்தம் செய்த போது, ‘எா்த்’ கம்பியிையைத் தொட்டதில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கீழச்சிவல்பட்டி போலீஸாா் உடலை கூறாய்வுக்காக திருபத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →