விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், கோட்டிக்குப்பம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் செ.காசிநாதன்(72). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டின் அருகில் உள்ள குட்டைக்கு குளிக்கச் சென்றாா். அப்போது அங்கு மின் கம்பத்திலிருந்து அறுந்து கீழே கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து காசிநாதன் தூக்கி வீசப்பட்டாா்.
இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, காசிநாதன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.