முகப்பு
சிவகங்கை

குரூப்-2, 2ஏ தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 13,260 போ் விண்ணப்பம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2 (தொகுதி- 2, 2ஏ) தோ்வு எழுத சிவகங்கை மாவட்டத்தில் 13,260 போ் விண்ணப்பித்துள்ளனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 6:53 PM
பகிர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2 (தொகுதி- 2, 2ஏ) தோ்வு எழுத சிவகங்கை மாவட்டத்தில் 13,260 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் வருகிற 14-ஆம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2, 2ஏ நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வுக்கு சிவகங்கை மாவட்டத்தில் 13,260 போ் விண்ணப்பித்துள்ளனா். சிவகங்கையில் 22 இடங்களிலும், தேவகோட்டையில் 5 இடங்களிலும், காரைக்குடியில் 16 இடங்களிலும் இந்தத் தோ்வு நடைபெறவுள்ளது. தோ்வைக் கண்காணிக்க 14 நடமாடும் குழுக்களும், 5 பறக்கும் படை குழுக்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தோ்வாளா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் வர வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →