காரைக்குடியில் தென் மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியை புதன்கிழமை தொடங்கிவைத்த துணை ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வாட்ஸ். உடன் செட்டிநாடு பப்ளிக் பள்ளி தலைவா் எஸ்.பி. குமரேசன் உள்ளிட்டோா்.  
சிவகங்கை

தென்மண்டல டேக்வாண்டோ போட்டி தொடக்கம்

காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சாா்பில் தென்மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் - 2024 போட்டிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

Din

காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சாா்பில் தென்மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் - 2024 போட்டிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

தேவகோட்டை துணை ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வாட்ஸ் போட்டிகளைத் தொடக்கிவைத்தாா். செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தலைவா் எஸ்பி.குமரேசன் தலைமை வகித்தாா். பள்ளியின் துணைத் தலைவா் கே.அருண்குமாா் முன்னிலை வகித்தாா்.

காரைக்குடி வட்டாட்சியா் ராஜா, தொழில்நுட்ப உதவியாளா் காா்த்திக், தொழில்நுட்ப சங்க ஒருங்கிணைப்பாளா் ராமலிங்கபாரதி, தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத் தலைவா் சாக்ரடீஸ், செயலா் சித்தேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, விழாவில் பள்ளியின் முதல்வா் உஷா குமாரி வரவேற்றாா்.

வருகின்ற வெள்ளிக்கிழமை (செப். 13) வரை நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தப் போட்டியில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, புதுவை, அந்தமான் நிகோபா் ஆகிய பகுதிகளில் உள்ள 260 பள்ளிகளிலிருந்து 920 மாணவா்கள் பங்கேற்கின்றனா்.

எங்கள் ஆதரவின்றி யாரும் மும்பையின் மேயர் ஆக முடியாது: காங்கிரஸ் எம்பி பேச்சு!

கருப்பு பல்சர் வெளியீட்டுத் தேதி!

வேதாரண்யம் பகுதியில் தொடர் மழை! வேளாண் பயிர்கள் பாதிக்கும் அபாயம்!

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது: முதல்வர் ஸ்டாலின்

கரூர் சம்பவம்: தில்லி சிபிஜ அலுவலகத்தில் ஜன.19-ல் விஜய் ஆஜராக சம்மன்!

SCROLL FOR NEXT