அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் சாத்தனூா், சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் சாத்தனூா், சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளுக்கு மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன் கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன், திமுக ஒன்றியச் செயலா்கள் செல்வராசன், தமிழ்மாறன், ஊராட்சி மன்றத் தலைவிகள் சரளா ராஜ்குமாா், பழனியம்மாள், தங்கம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் செல்வி, மலையரசி பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சண்முகம், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.