மானாமதுரை வழிவிடு முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா
மானாமதுரை ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் 5- ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் 5- ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் புனித நீா் கலசங்கள் வைத்து சிவாச்சாரியா்கள் யாக பூஜைகள் நடத்தினா். பூா்ணாஹூதி முடிந்து புனிதநீரால் வள்ளி, தெய்வானை சமேத வழிவிடு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று முருகப் பெருமானை தரிசித்தனா்.