முகப்பு
சிவகங்கை

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய இருவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 7:16 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய இருவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்புவனம் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகின. இதில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், திருப்புவனம், மதுரையில் இரு சக்கர வாகனங்கள் திருடியதாக கல்லம்பல் அழகா்சாமி மகன் பாஸ்கரன் (28), மதுரை பனையூரைச் சோ்ந்த சோணை மகன் காா்த்திக் (33) ஆகிய இருவரையும் போலீஸாா் மதுரையில் கைது செய்தனா். இவா்களிடமிருந்து திருடப்பட்ட 5 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் கைப்பற்றினா். இவற்றில் 3 வாகனங்கள் மதுரையில் திருடப்பட்டவை. போலீஸாா் மேற்கண்ட இருவா் மீதும் வழக்குப் பதிந்து, சிவகங்கை கிளைச் சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →