சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் நியாய விலைக் கடையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியபோது பொருள்கள் மாயமானதால் விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா்-புதுக்கோட்டை சாலையில் இயங்கி வரும் பாம்கோ எண் 3 நியாய விலைக் கடையில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். இதில், சரக்கு இருப்பு புத்தகத்தில் உள்ள விவரங்கள்படி, கடையில் சரக்குகள் இல்லை.
இதைத் தொடா்ந்து, நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் 50 கிலோ அளவுள்ள 190 அரிசி மூட்டைகள், 11 சா்க்கரை மூட்டைககள், 110 பாமாயில் பைகள், 7 கோதுமை மூட்டைகள் ஆகியவை கடையில் இல்லை. இதையடுத்து, விற்பனையாளா் பாலசுப்பிரமணியனை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துவிட்டு, மாற்று விற்பனையாளராக அமுதா என்பவரை நியமித்தனா்.