சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 31-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்டத்தின் அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதி விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என்றாா் அவா்.