மார்ச் 28-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர்; அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான இறுதிப்போட்டி அகமதாபாதில் இன்று (மார்ச் 8) நடைபெற்று வருகிறது.
இந்திய அணி கோப்பையை வென்று வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ள நிலையில், ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 28-ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதை அதன் அதிகாரபூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடங்கும் நாள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டாலும், போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.