முகப்பு
சிவகங்கை

தை பூசம்: காரைக்குடியிலிருந்து பழனிக்கு ரயில் இயக்கக் கோரிக்கை

தை பூசத்தையொட்டி, காரைக்குடியிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம், ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 10:06 PM
பகிர்:

தை பூசத்தையொட்டி, காரைக்குடியிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம், ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து தொழில் வணிகக்கழகத் தலைவா் சாமி. திராவிடமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தைப்பூசத்தையொட்டி பழனிக்கு ஏராளமான பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக பாதயாத்திரையாகவும், பேருந்துகளிலும் செல்கின்றனா். பக்தா்களின் கூடுதல் வசதிக்காக வருகிற பிப். 11, 12 -ஆம் தேதிகளில் தைபூசத்தன்று பழனிக்கு சென்று திரும்பும் வகையில் காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல் வழியாக சிறப்பு ரயில் இயக்கவேண்டும்.

கடந்த 2016- ஆம் ஆண்டு பழனிக்கு தைப்பூசத் திருவிழாவுக்காக வண்டி எண்: 06705 என்ற ரயில் 2 நாள்கள் காரைக்குடியிலிருந்து சிவகங்கை, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, இந்த ஆண்டு வருகிற பிப். 9, 10 தேதிகளிலும், பிப். 11, 12-ஆம் தேதிகளி லும் சிறப்பு ரயில் இயக்கவேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →