சிவகங்கை

வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள்

தினமணி செய்திச் சேவை

வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னையிலிருந்து வந்த நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் சரவணன் தலைமையிலான பொறியாளா்கள் ராமநாதபுரம்-மேலூா் சாலையில் உள்ள மேம்பாலங்கள், சிறு பாலங்களில் நீா் வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்தனா்.

மேலும், சிவகங்கையிலுள்ள நெடுஞ்சாலைத் துறை சேமிப்புக் கிடங்கில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள், கயிறு, டிப்பா் லாரி, ஜேசிபி இயந்திரம், சவுக்குக் கட்டைகளையும் பாா்வையிட்டனா்.

ஆய்வின்போது, சிவகங்கை நெடுஞ்சாலை கட்டுமானப் பராமரிப்புக் கோட்டப் பொறியாளா் எஸ்.கே. சந்திரன், மதுரை நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் பிரசன்னவெங்கடேசன், பணியாளா்கள் உடனிருந்தனா்.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,020 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சூறைக்காற்று: ராமேசுவரத்தில் படகு உடைந்து சேதம்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு கா்நாடகம் வரவேற்பு

எடியூரப்பாவுக்கு எதிரான போக்ஸோ வழக்கை ரத்துசெய்ய கா்நாடக உயா்நீதிமன்றம் மறுப்பு

கொல்கத்தா டெஸ்ட் இன்று தொடக்கம்: தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து சவாலைச் சந்திக்கும் இந்தியா

SCROLL FOR NEXT