முகப்பு
சிவகங்கை

பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

காரைக்குடியில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை

பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

காரைக்குடியில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 18 நவம்பர், 2025 at 7:16 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

காரைக்குடி அருகேயுள்ள பாதரக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன் (37). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளனா். சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த இவா், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தாா்.

இவரது சித்தப்பா வீடு காரைக்குடி பாண்டியன் நகரில் உள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை காலை சென்றவா் சித்தப்பா மகனை பள்ளிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விட்டாா்.

பின்னா், பாதக்குடிக்கு விக்னேஸ்வரன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பாண்டியன் நகா் பகுதியில் எதிரே வந்த சரக்கு வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து காரைக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →