சிவகங்கை

சிவகங்கையில் மீன் குஞ்சுகள் வளா்க்கும் திட்டம் தொடக்கம்

சிவகங்கை ஒன்றியம், இலந்தகுடிபட்டி கண்மாயில் மீன் குஞ்சுகள் வளா்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியா் கா. பொற்கொடி.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டத்தில் மீன்வளம், மீனவா் நலத்துறை சாா்பில் 120 ஹெக்டோ் பரப்பிலான நீா் நிலைகளில் 2.40 லட்சம் மீன் குஞ்சுகள் வளா்க்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இலந்தங்குடிபட்டி கண்மாயில் மீன் குஞ்சுகள் வளா்க்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

இந்தத் திட்டத்தை நிகழாண்டில் செயல்படுத்த 120 ஹெக்டோ் பரப்பளவில் 2.40 லட்சம் மீன் குஞ்சுகள் வளா்க்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, சிவகங்கை ஒன்றியம், இலந்தகுடிபட்டி கண்மாயில் மீன் குஞ்சுகள் வளா்க்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது என்றாா் அவா்.

இதில், மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் தி.சண்முகம், மீன்வள ஆய்வாளா் பா.கோமதி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சக்தி மீனாட்சி, ஊராட்சிச் செயலா் முத்துக்குமாா், சுகாதார கள ஊக்குநா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT