முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் ரூ.65 லட்சம் பறிமுதல்

காரைக்குடியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.65 லட்சம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 9 ஏப்ரல் 2026, 12:42 am IST
- கோப்புப் படம்
பகிர்:

காரைக்குடியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.65 லட்சம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக் கிளைகளிலிருந்து மதுரை வங்கிக் கருவூலத்துக்கு வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 65 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.