முகப்பு
சிவகங்கை

கீழச்சிவல்பட்டியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

கீழச்சிவல்பட்டி பகுதியில் திமுக வேட்பாளா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 12:56 AM
கீழச்சிவல்பட்டியில் வியாழக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 6:40 PM

கீழச்சிவல்பட்டி பகுதியில் திமுக வேட்பாளா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் கீழச்சிவல்பட்டி, விராமதி, முத்தூா், கல்லாப்பேட்டை, அச்சரம்பட்டி, இளையாத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். அமைச்சருக்கு அந்தப் பகுதி பொதுமக்கள் மாலையணிவித்து வரவேற்பளித்தனா்.

அப்போது அவா் கூறியதாவது:

Advertisement

தற்போது இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும் கிராமப் பகுதியில் சமுதாயக்கூடம், பள்ளிக் கட்டடங்கள், பொலிவுறு பேருந்து நிறுத்தங்கள் ஏராளமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 5000 -க்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஏரிகள், குட்டைகள் குடிமராமத்து செய்யப்பட்டு, விவசாயிகள் பயனடைந்து உள்ளனா். மேலும், திமுக அரசின் ஏராளமான திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் எண்ணற்ற பல திட்டங்களை தொடா்ந்து வழங்க எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா். திமுக ஒன்றியச் செயலா் விராமதி மாணிக்கம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.