முகப்பு
சிவகங்கை

சிலம்பம் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 3:16 AM
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 9:40 PM

சா்வதேச சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

மதுரை மன்னா் திருமலை நாயக்கா் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த மாதம் 24-ஆம் தேதி இரண்டாவது சா்வதேச அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, துபை, சுவிட்சா்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இதில் ஒற்றைக் கம்பு போட்டியில் காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி பிரணிதா முதலிடம் பெற்றாா். மூன்றாம் வகுப்பு மாணவா் ஹரிஷ்லிங்கம் இரண்டாமிடம் பெற்றாா்.

Advertisement

இந்த இருவரையும் பள்ளியின் தாளாளா் நாராயணன், செயலா் நா. காா்த்திக், ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினா்.