சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் நாகநா்மதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சிங்கம்புணரி நகா், கிருங்காக்கோட்டை, ஒடுவன்பட்டி, அணைக்கரைப்பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, செறுதப்பட்டி, ஆ.காளாப்பூா், மேலப்பட்டி, எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, வையாபுரிபட்டி, வேங்கைப்பட்டி, செல்லியம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம இருக்காது என்றாா் அவா்.