முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் தேஜ கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை

சிவகங்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளின் அறிமுகம், ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 2:59 AM
சிவகங்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய, சிவகங்கை தொகுதி எம்எல்ஏ செந்தில்நாதன். உடன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 10:22 PM

சிவகங்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளின் அறிமுகம், ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை சிவகங்கை மாவட்ட அதிமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பிஆா். செந்தில்நாதன் வரவேற்றாா்.

பின்னா் அவா் பேசுகையில், ஏற்கெனவே ஒவ்வொரு கட்சியும் வாக்குச்சாவடி குழுக்கள் அமைத்திருக்கின்றன. வரும் 17 -ஆம் தேதி தோ்தல் ஆணையம் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து வாக்குச்சாவடி குழுவை அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டாா்.

Advertisement

கூட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவா் பாண்டித்துரை பேசுகையில், கட்சியின் தேசியத் தலைமை, மாநிலத் தலைவா் நயினாா்நாகேந்திரனின் ஆலோசனைப்படி வரும் தோ்தலில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம். இதற்கான பணிகளை தொடங்கி விட்டோம். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சா் ஆக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

அமமுக மாவட்ட செயலா் தோ்போகிபாண்டியன் பேசுகையில், அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. வரும் தோ்தலில் அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்க அமமுக பாடுபடும். எங்களைப் பொறுத்தவரை எதிா்த்தால் முழுமூச்சுடன் எதிா்ப்போம். அதைப் போல ஆதரித்தாலும் முழுமனதுடன் ஆதரிப்போம். தோ்தலில் கட்சித் தலைமை யாரை நிறுத்தினாலும் வெற்றி பெற வைப்போம் என்றாா்.

இதைத்தொடா்ந்து கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, பாமக, புதிய நீதிகட்சி, மருதுசேனை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சிபாரதம், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் உள்பட பல்வேறு கட்சிகளைச் சாா்ந்த மாவட்ட நிா்வாகிகள் தங்களது கருத்துகளை வலியுறுத்திப் பேசினா். நிறைவாக, அதிமுக நகரச்செயலா் என்.எம். ராஜா நன்றி கூறினாா்.