சொக்கநாதபுரத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் எல்லையை நோக்கிப் பாய்ந்து சென்ற காளைகள் 
சிவகங்கை

மதகுபட்டி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் மாட்டு வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் மாட்டு வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதகுபட்டி அருகே சொக்கநாதபுரம் சேவுகப்பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயம் சொக்கநாதபுரத்திலிருந்து மதகுபட்டி மின்வாரிய அலுவலகம் வரை நடைபெற்றது. இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 42 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

8 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்டிருந்த பெரிய மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 5 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்டிருந்த சிறிய மாடு பிரிவில் 28 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த பந்தயத்தை சுற்றுவட்டாரக் கிராம மக்கள் கண்டுகளித்தனா்.

காமராஜா் துறைமுக அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக மீனவா்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

புழல் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

அடுத்து ஆட்சி அமைப்பது யாா்?பேரவையில் ஆருடம் கூறிய உறுப்பினா்கள்

ஜேஇஇ முதன்மைத் தோ்வு: அரசு மாதிரிப் பள்ளிகளில் படித்த 448 மாணவா்கள் தோ்ச்சி

SCROLL FOR NEXT