சிவகங்கை

கல்லல் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள கோவினிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவினிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 48 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பெரிய மாட்டு வண்டிப் பிரிவில் 16 ஜோடி மாடுகளும், இரு சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாட்டு வண்டிப் பிரிவில் 32 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.

கோவினிப்பட்டி-கண்டுப்பட்டி இடையே பெரிய மாட்டுப் பிரிவுக்கு 7 கி.மீ. தொலைவும், சிறிய மாட்டுப் பிரிவுக்கு 5 கி.மீ. தொலைவும் பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்டு, போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை ஏராளமானோா் சாலைகளின் இருபுறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனா்.

ஆலங்குளத்தில் ஐவா் கால்பந்துப் போட்டி: நாகா்கோவில் அணி சாம்பியன்

தமிழகத்தில் சூதாட்ட தளங்களை தடை செய்ய நடவடிக்கை: முகமது நசிமுத்தின்

மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி

உண்மைக் குற்றவாளிகளை திமுக அரசு தப்பிக்க வைக்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளா்கள்

SCROLL FOR NEXT