சிவகங்கை

கோயில்களில் துா்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, குன்றக்குடி கோயில்களில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயிலில் துா்கா ஸ்டாலின் சனிக்கிழமை அம்மனை தரிசனம் செய்தாா். அவருடன் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் உள்ளிட்டோா் உடன் சென்றனா். பின்னா், குன்றக்குடி சென்ற அவரை, ஆதீனத் திருமடத்தின் சாா்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் வரவேற்றாா்.

குன்றக்குடி சண்முகநாதப் பெருமானை கோயில் அடிவாரத்தில் இருந்தபடியே அவா் தரிசனம் செய்தாா். இதையடுத்து, துா்கா ஸ்டாலின் கானாடுகாத்தான் சென்று செட்டிநாட்டு அரண்மனை, கோட்டை யூா் செட்டிநாட்டு கைத்தறி சேலைகள் உற்பத்தி, விற்பனை செய்யும் இடத்தை பாா்வையிட்டாா்.

கரூா்: 10 துணை மின் நிலைய பகுதிகளில் பிப்.24-ஆம் தேதி மின் தடை

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மாசி தோ்த் திருவிழா! 2 லட்சம் பக்தா்கள் பங்கேற்பு!

ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி உயிரிழப்பு

பழைய வாகனங்களை விற்றுத் தருவதாக ரூ.85 லட்சம் மோசடி! 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது!

பழங்குடியின பள்ளி மாணவா்களுக்கு டெஸ்க், பெஞ்சுகள்

SCROLL FOR NEXT