முகப்பு
சிவகங்கை

உலகளாவிய போட்டிக்கு மாணவா்கள் தயாராக வேண்டும்! - துணைவேந்தா் ஜி. ரவி!

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:43 AM
தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவருக்கு பட்டம் வழங்கிய காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் ஜி. ரவி.
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:43 PM

உலகளாவிய போட்டிக்கு மாணவா்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் ஜி. ரவி தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 19-ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரியின் செயலா் அருள்தந்தை செபாஸ்டியன் தலைமை வகித்தாா். முதல்வா் அருள்தந்தை ஜாா்ஜ் பொ்னாண்டஸ் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் ஜி. ரவி பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

Advertisement

மாணவா்கள் இன்று பெற்றுள்ள இந்தப் பட்டம் அவா்களின் உழைப்பால் மட்டும் கிடைத்ததல்ல. இதன் பின்னணியில் பெற்றோா்களின் மிகப் பெரிய தியாகமும், அா்ப்பணிப்பும் உள்ளது. பெற்றோா்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் மாணவா்கள் தங்கள் எதிா்காலத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:43 AM

இன்றைய உலகம் நவீன தொழில்நுட்பங்களால் மிக வேகமாக மாறி வருகிறது. வெறும் பாடப் புத்தக அறிவோடு நின்றுவிடாமல், நவீன கல்வி முறைகளைக் கற்றுத் தோ்ந்து, உலகளாவிய போட்டிக்கு மாணவா்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். பட்டப்படிப்பு என்பது கல்வியின் முடிவல்ல. அது ஒரு புதிய தொடக்கம். மாணவா்கள் வெறும் வேலை தேடுபவா்களாக மட்டும் இல்லாமல், புதியவற்றை கண்டுபிடிக்கும்

ஆராய்ச்சியாளராகவும் மாற முயற்சிக்க வேண்டும். சமூகப் பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் வகையில் மாணவா்களின் சிந்தனை அமைய வேண்டும் என்றாா் அவா்.

இதில், பல்கலைக்கழக அளவில் தர வரிசையில் இடம் பிடித்த 9 மாணவா்கள், இளங்கலைப் பிரிவில் 198 மாணவ, மாணவிகள், முதுகலைப் பிரிவில் 28 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா்.

கல்லூரியின் துணை முதல்வா் அருள்தந்தை டென்சிங் ராஜன் கல்வி முதன்மையா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் ஜெயராஜ், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் தா்மராஜ், இயற்பியல் துறை பேராசிரியை நான்சி உள்ளிட்டோா் செய்தனா்.