சிவகங்கை

மருத்துவமனையில் மதுப் புட்டிகள்: மருத்துவா்கள் உள்பட 5 போ் பணியிடை நீக்கம்

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதுப் புட்டிகள் கிடந்த விவகாரத்தில், அங்கு பணியாற்றிய 4 மருத்துவா்கள், ஒரு மருந்தாளுநா் உள்பட 5 பேரை சுகாதாரத் துறை அதிகாரி வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்தாா்.

செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவா்கள் தங்கும் அறையில் கடந்த மாதம் 31-ஆம் தேதி இரவு மதுப் புட்டிகள் கிடந்தன. இதுகுறித்த விடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.

இதையடுத்து, சுகாதாரத் துறை தலைமை மருத்துவா் மீனாட்சி விசாரணை நடத்தினா். பின்னா், மருத்துவா்கள் சசிகாந்த், கௌஷிக், நவீன்குமாா், மணிரத்தினம், மருந்தாளுநா் கமலக்கண்ணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அவா் உத்தரவிட்டாா்.

மேலும், அன்று பணியிலிருந்த செவிலியா், மருத்துவமனை ஊழியருக்கு விளக்கம் கேட்டு மருத்துவத் துறை அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளாா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT