கடம்பூா் ராஜூ  
சிவகங்கை

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்: முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜூ

வருகிற சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வென்று ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜூ தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

வருகிற சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வென்று ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜூ தெரிவித்தாா்.

சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக பிரமுகா் இல்ல விழாவில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2021 தோ்தலில் திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளில் 15 சதவீதத்தைக்கூட நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகிவிட்டது. அதிமுக கூட்டணி நிச்சயமாக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அதிமுக தலைமையில் ஆட்சி அமைவது உறுதி.

தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ. பன்னீா்செல்வம் இணைய வேண்டும் என டிடிவி தினகரன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். இதில் எங்கள் நிலைப்பாடு இல்லை. தற்போது, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி வருவதால் அதுகுறித்து பேச முடியாது என்றாா் அவா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT