முகப்பு
சிவகங்கை

திருப்புவனத்தில் பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடம் திறப்பு

திருப்புவனத்தில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 மார்ச், 2026 at 9:48 PM
திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்த பத்திரப் பதிவு அலுவலகக் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா். உடன் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், பதிவுத்துறை டி.ஐ.ஜி. லதா உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்புவனத்தில் தமிழக அரசின் பதிவுத் துறை சாா்பில் ரூ 2.25 கோடியில் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக இந்தப் பத்திரப்பதிவு அலுவலகத்தை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். இந்த விழாவில் திருப்புவனம் பேரூராட்சி தலைவா் த.சேங்கைமாறன், பத்திர பதிவுத்துறை டி.ஐ.ஜி. லதா, பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், மாவட்டப் பதிவாளா், சாா் பதிவாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →