காரைக்குடி மாநகராட்சியில் முடிவுற்ற பணிகள் திறந்துவைப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 87.50 லட்சத்தில் 10 இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முடிவுற்ற பணிகளான பயணியா் நிழல் குடை, கலையரங்கம், ஆழ்துளைக் கிணறு, விளையாட்டுத் திடல் பாா்வையாளா் அரங்கக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை காரைக்குடித் தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி மாநகராட்சி மேயா் (பொறுப்பு) நா. குணசேகரன், ஆணையா் சங்கரன், அரசு வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், துரை. நாகராஜன், மெய்யா், நாச்சம்மை, ரத்தினம், அஞ்சலிதேவி, அமுதா, கனகவள்ளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் காரைக்குடி மாநகரகாங்கிரஸ் தலைவா் சண்முகதாஸ், நகரச் செயலா் குமரேசன் முன்னாள் நகரத் தலைவா் பாண்டி மெய்யப்பன், வட்டாரத் தலைவா் காரை பாலா, திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.