காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் வளா்ச்சியில்லை: அண்ணாமலை யாரை சொல்கிறார்..?
காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் இங்கு வளா்ச்சியில்லை என அண்ணாமலை கூறியது...
காரைக்குடி: காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் இங்கு வளா்ச்சியில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.
காரைக்குடி தொகுதியில் என்டிஏ கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி வருமானவரி அலுவலகம் அருகே கே. அண்ணாமலை பிரசாரம் செய்தார்.
அப்போது அவா் பேசியதாவது:
Advertisement
Advertisement
காரைக்குடி நகரம், செட்டிநாடு கலாச்சாரத்தின் தலைநகரம். ஆனால், இங்குள்ள இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலை கிடைக்காமல் வெளியூருக்கு செல்லும் நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒரு குடும்பம் காரைக்குடியை பிடித்து வைத்திருக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் காரைக்குடி தொகுதியின் வளர்ச்சிக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இந்த தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ மாங்குடி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யாமல், சிதம்பரம் குடும்பத்தினர் பின்னால் ஒரு உதவியாளராக நிற்கும் அவலநிலையில் உள்ளார்.
காங்கிரஸ் கட்சியால் தமிழகத்திற்கு என்ன பலன் கிடைத்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தான் கச்சத்தீவு தாரைவாா்க்கப்பட்டது. மீத்தேன், ஹைட்ரோ காா்பன் திட்டங்களை திமுக அனுமதித்துவிட்டு பாஜக மீது பழி சுமத்துகிறது. நாட்டில் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சி விரட்டப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஒன்றுக்கும் உதவாத காங்கிரஸின் அடிமையான திமுக அவர்களுக்கு 28 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இது எப்படிப்பட்ட அடிமை கூட்டணி என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
தமிழகம் அமைதிப் பூங்கா என்கிறாா் முதல்வா் ஸ்டாலின். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 8,008 படுகொலைகள், 2,080 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 39,900 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.
இப்படிபட்ட மனிதர்களின் கைகளில் காரைக்குடி மறுபடி சிக்கி விடக்கூடாது. காரைக்குடி வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். இது ஆட்சி மாற்றத்துக்கான தோ்தல் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
எனவே, காரைக்குடி மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் தேர்போகி பாண்டியனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.
The Karaikudi constituency lacks development because it is in the grip of a single family" - Who is Annamalai referring to?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.