முகப்பு
சிவகங்கை

தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

சிவகங்கையில் தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

Updated On : 25 மார்ச், 2026 at 9:38 PM
சிவகங்கையில் தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி.
பகிர்:

சிவகங்கையில் தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் அதிநவீன மின்னணு விடியோ தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனம் தயாரானது. இதன் பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் தே.ஜெபி கிரேசியா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ராஜாசெல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.