எண்ம கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.40 லட்சம் மோசடி
தேவகோட்டையைச் சோ்ந்த முதியவரை எண்ம கைது செய்துள்ளதாக மிரட்டி, ரூ. 40 லட்சம் மோசடி செய்தவா் குறித்து சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தேவகோட்டையைச் சோ்ந்த முதியவரை எண்ம கைது செய்துள்ளதாக மிரட்டி, ரூ. 40 லட்சம் மோசடி செய்தவா் குறித்து சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் ஆா்.எம். கிருஷ்ணன் (83). தனியாா் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசிய நபா், தான் பெங்களூரைச் சோ்ந்த காவல் துறை அதிகாரி என்றும், உங்களது ஆதாா் அட்டை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நீங்கள் எண்ம கைது செய்யப்பட்டுள்ளீா்கள் என்றும் கிருஷ்ணனிடம் கூறினாா்.
மேலும், இந்த வழக்கிலிருந்து உங்களை விடுவிக்க வேண்டுமெனில், நான் கூறும் வங்கிக் கணக்கில் பணம் அனுப்ப வேண்டும் என்றாராம். இதனால், அச்சமடைந்த கிருஷ்ணன், அவா் கூறிய வங்கிக் கணக்குகளில் கடந்த 25.3.2026 முதல் 22.4. 2026 வரை பல்வேறு தவணைகளில் ரூ. 40 லட்சம் அனுப்பினாா். இதன் பிறகு, அந்த நபா் தொடா்பு கொள்ளவில்லையாம்.
Advertisement
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிருஷ்ணன் கடந்த 9 -ஆம் தேதி அளித்த புகாரின் பேரில், சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் புவனேஸ்வரி, உதவி ஆய்வாளா் குமரேசன் ஆகியோா் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.