தேனி

லாரி-பைக் மோதல்: கல்லூரி மாணவர் சாவு

ஒட்டன்சத்திரம் அருகே பைக்கும், லாரியும் மோதிய விபத்தில் காயமடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

தினமணி

ஒட்டன்சத்திரம் அருகே பைக்கும், லாரியும் மோதிய விபத்தில் காயமடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

        தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மேலத்தெருவைச் சேர்ந்த இன்னாசி ராஜா மகன் அந்தோணி விஜய் (20). இவர், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அடுத்துள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர், புதன்கிழமை இரவு பைக்கில் தனது நண்பரான கணேசன் என்பவருடன் திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை ரெட்டியார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே செல்லும்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

  அங்கு வியாழக்கிழமை அந்தோணி விஜய் உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து பழனி அருகே பச்சளநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான திருமூர்த்தியை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT