தேனி

தேனி மாவட்டத்தில் ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம்

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் ஆக.15-ஆம் தேதி சுதந்திர தின விழாவையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஊராட்சிகளில் ஆக.15-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அந்தந்த ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த வாக்குரிமை பெற்ற அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை, குடிநீர் பிரச்னை, பொது சுகாதாரம், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள், மகளிர் திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT