தேனி

முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை வழக்கு: இந்து எழுச்சி முன்னணி எதிர்ப்பு

DIN

தேனி மாவட்டத்துக்குள்பட்ட காவல் நிலையங்களில் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மீது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக போலீஸார் வழக்கு பதிவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை இந்து எழுச்சி முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மனு அளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு நாள்,  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி மற்றும் குருபூஜை,  விநாயகர் சதுர்த்தி விழா ஆகிவற்றையொட்டி,  பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொத்தம் 159 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து,  சம்பந்தப்பட்ட நபர்களை வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தி நன்னடத்தை உறுதிச் சான்று பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை செய்து வரும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்குப் பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவர் ராமராஜ் தலைமையில்  நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT