தேனி

வாகன விபத்தில் ஆயுதப்படை காவலர் உள்பட 12 பேர் காயம்

DIN

ஆண்டிபட்டி அருகே சனிக்கிழமை இரவு போர்வெல் வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த போலீஸ் காவலர் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.
   தேனியிலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, ஆண்டிபட்டி முத்திரையன்பட்டி விலக்கு அருகில் முன்னால் சென்றுகொண்டிருந்த போர்வெல் வாகனத்தின் மீது மோதியது. இதில், தனியார் பேருந்தில் பயணம் செய்த தேனி ஆயுதப் படை பிரிவைச் சேர்ந்த காவலர் மணிமுத்து (34), தேனியைச் சேர்ந்த தங்கம் (47), கோவில்பட்டியைச் சேர்ந்த லட்சுமி (37), மணி (40), தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்த அம்பிகா (23) உள்பட 12 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள், க.விலக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
   இந்த விபத்து தொடர்பாக, உசிலம்பட்டியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் பெரியசாமி (31) என்பவர் மீது வழக்குப் பதிந்து, க.விலக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT