தேனி

போடியில் வழக்குரைஞர் வீட்டில் 19 பவுன் நகை திருட்டு

DIN

போடியில் வழக்குரைஞர் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகையை திருடியவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
 போடி பனோரமா நகரில் வசித்து வருபவர் பா.ஜான்மோகன்தாஸ் (50). வழக்குரைஞர். இவர் சென்னையில் படித்து வரும் தனது மகனை பார்க்க சனிக்கிழமை தனது மனைவியுடன் சென்றாராம். மீண்டும் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் மாடிப் பகுதியில் உள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 19 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. 
போடி டி.எஸ்.பி. பிரபாகரன் திருட்டு நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT