குமுளி மலைப்பாதையில் கடந்த 5 நாள்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்த காரை வெள்ளிக்கிழமை லோயர்கேம்ப் போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
தமிழக- கேரள எல்லையை இணைக்கும் குமுளி மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இந்த பாதை தமிழக எல்லை லோயர்கேம்ப்பிலிருந்து கேரள மாநிலம் குமுளி வரை 6 கிலோமீட்டர் தூரம் உள்ளது. 5 ஆவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தமிழக வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறை சோதனை சாவடிகளுக்கிடையே ஒரு கார் கடந்த 5 நாள்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதுபற்றி லோயர்கேம்ப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.என். 31 ஏ.ஒய். 3705 என்ற பதிவு எண் கொண்ட அந்த காரை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.